புரியாத வரிகளில்
கிறுக்கல்களாய்
கவிதைகள்....
விளக்கம் கேட்டனர்
பலர்...
விடையாய் அமைந்தது
என் மௌனம் மட்டுமே...
தோன்றும் வார்த்தைகளை
எழுதிபார்கிறேன்
கோர்வை இருக்கிறது
அர்த்தம் அறிய முடியவில்லை...
அறிய முற்படுகிறேன்
அறிவதற்குள் அப்பால்
சென்று விடுகிறது.....
Friday, September 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment