Friday, September 17, 2010

சிறுகதைகள்...

நான் எதார்த்தமாக வாழ்க்கையில் நடந்து செல்லும்பொழுது தவறுதலாக என் பாதம் சில சமயம் கல்லில் பட்டு தெறித்திருக்கிறது ....அந்த உண்மை சம்பவங்களை கொண்டு இனிமேல் சில சிறு கதைகளை வீசி விட்டு செல்ல போகிறேன்....

காதலி "இரவு..."

இரவுகள் விட்டுபிரிந்து
தருணங்கள் பகல்களாய்
என்னை தகிக்கிறது...

இரவின் கண்ணியம் காக்க
நிலவெனும் காவலன்
காவல் இருந்து இருந்து ....
களைத்துபோய்,..
தேய்ந்து தேய்ந்து
ஒரு நாள் காணாமல்
போகிறான்...

அன்றுதான் நானும் இரவும்
கலப்பதற்கு சௌகரியம் ....
என்ன தாயின் கருவறை கூட
இவ்வளவு இருட்டாக
இருந்ததில்லை...

என் வெளியே மட்டுமல்ல...
உள்ளேயும் இவ்விரவு
நீக்கமற நிறைந்துள்ளது....

காலடி தடம்

கனவில் கூட காட்சிகள்
தொலைவதில்லை...
ஆனால்
காட்சிகள் மாறும்பொழுது
விழிப்புணர்வு கொள்கிறேன்....

வெள்ளையான உருவம்
நடந்து போன
பாதச்சுவடு என் கனவு
காட்சிகளில்...

எங்கிருந்தோ வந்து
தடம் பதித்து சென்றாள்...
இப்பொழுது
கனவுகள் வருகிறதோ இல்லியோ..
காலடி தடம் மட்டும்
காட்சிகளாய்...

கரைந்து விடுங்கள்

கற்றுக்கொண்ட வார்த்தைகள்
கவனிப்பின்றி
தாறுமாறாய்
தாள்களில் பொறிக்கிறேன்.....

எல்லோரும் திறமை
என்றனர்...
என்னால் மட்டும்
ஏற்க முடியவில்லை...

வார்த்தைகள் புதுமை இல்லை...
நினைவுகளில் புதுமை இல்லை...
காட்சிகளில் புதுமை இல்லை....
கருத்துக்களில் புதுமை இல்லை...

வரிகளை வடிவமைத்
திருக்கிறேன்

அர்த்தம் புரிந்தால்
சிந்தியுங்கள்...
புரியாவிட்டால்
கரைந்து விடுங்கள்...

புரியாத வரிகள்...

புரியாத வரிகளில்
கிறுக்கல்களாய்
கவிதைகள்....

விளக்கம் கேட்டனர்
பலர்...
விடையாய் அமைந்தது
என் மௌனம் மட்டுமே...

தோன்றும் வார்த்தைகளை
எழுதிபார்கிறேன்

கோர்வை இருக்கிறது
அர்த்தம் அறிய முடியவில்லை...

அறிய முற்படுகிறேன்
அறிவதற்குள் அப்பால்
சென்று விடுகிறது.....

Sunday, October 18, 2009

விடை கொடுக்காதீர்கள் !!!!


சலனங்களை வார்த்தைகளால் கொட்டியபடி மிதந்து சென்று கொண்டிருந்தேன். என் எதிரில் பாலைவனமாய் விரிந்த மண் சோலையில் சிறு சிறு துகள்களும் என்னை பார்த்து கை கொட்டி சிரித்து கொண்டிருந்தது. என் கண்களில் நீர் கூட நெருப்பு சாம்பலாய் சிதறி கொண்டிருந்தது. நிமிர்ந்து வானத்தை கூட பார்க்காமல் சிவப்பு வறட்டு மேகங்களுக்கு இடையில் இலக்கிலாமல் பறந்தது கொண்டிருந்தது அந்த கருப்பு பறவை. அதன் இறகுகள் விட்டு சென்ற திசைகள் இலக்காக கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது என் உடலின் இருந்த கால்கள்..என் மனதில் தோன்றி கொண்டிருந்த வார்த்தைகள் கொஞ்சம் கொஞ்சமாய் உதறி கொண்டிருந்தது...என்ன நாவும் முதலில் முயற்சி செய்து பிறகு தோற்று கொண்டிருந்தது... கையில் விரல்களோ வறண்ட காற்றில் ஈரத்தை தேடி காற்றை குத்தி கொண்டிருந்தது.....வருடங்களோ நிமிடங்களாக கரைந்திருந்து கொண்டிருக்கிறது....தரையில் இருந்த என்ன கால்களோ மெல்லமாய் பிடி நழுவி காற்றினில் எத்தனிக்க முயன்றது ... இப்பொழுது முழுவதுமாக என் நாவு அடங்கியது,,,
மனதும் அடங்கியது....சிவப்பு வானம் வெள்ளை ஆகியது... என் உடல் கரைந்து போனது ....என் செல்கள் நட்சத்திரமாகியது...செல்களை தழுவிய இருள்கள் வெளிச்சமாய் எனக்குள்...ம்ம்ம்ம்ம்....தெரியாத பாதை கூட இனிமையான பயணத்தை தோற்றுவிக்கிறது சில சமயங்களில்...பூமியை பார்ப்பதற்கு லட்சம் கண்கள் என்னுள்.....எனக்கு விடை கொடுக்காதீர்கள் ...நான் உங்களை பார்த்துகொண்டுதான் இருக்கிறேன்...