இரவுகள் விட்டுபிரிந்து
தருணங்கள் பகல்களாய்
என்னை தகிக்கிறது...
இரவின் கண்ணியம் காக்க
நிலவெனும் காவலன்
காவல் இருந்து இருந்து ....
களைத்துபோய்,..
தேய்ந்து தேய்ந்து
ஒரு நாள் காணாமல்
போகிறான்...
அன்றுதான் நானும் இரவும்
கலப்பதற்கு சௌகரியம் ....
என்ன தாயின் கருவறை கூட
இவ்வளவு இருட்டாக
இருந்ததில்லை...
என் வெளியே மட்டுமல்ல...
உள்ளேயும் இவ்விரவு
நீக்கமற நிறைந்துள்ளது....
Friday, September 17, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment